கோவை, மே 9– கோவையில் பணியாற்றி வந்த புலம்பெயர்ந்த தொழி லாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி வெள்ளியன்று துவங்கியது. இதன்படி தமிழக அரசு செலவில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங் ங்களுக்கு ரயில்களில் தொழிலா ளர்கள் அனுப்பி வைக்கப்பட் டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை, வரு வாயின்றி பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இதனைய டுத்து தங்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இத னையேற்று தமிழக அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இதன்ஒருபகு தியாக கோவை மாவட்டத் தில் பணியாற்றும் தொழிலா ளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி வெள் ளியன்று துவங்கியது. இதை யடுத்து அத்தொழிலாளர்கள் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந் தவர்கள் என்பது குறித்தும், அவர்களில் ஊருக்கு செல்ல விரும்புவர்கள் குறித்தும் கணக் க்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, கோவையிலிருந்து முதல்கட் டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 1140 தொழிலாளர்கள் வெள்ளியன்று அனுப்பி வைக் கப்பட்டனர். இதேபோன்று சனியன்று இரண்டாவது கட்ட மாக பீகார் மற்றும் உபி மாநி லத்திற்கு இரண்டு சிறப்பு ரயில்களில் இத்தொழிலா ளர்கள் அனுப்பி வைக்கப் பட்டனர். முன்னதாக, சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ள பீகார் மாநிலத்தவர்களை ரயில் நிலையம் அழைத்து வந்த மாவட்ட நிர்வாகம், அவர்க ளுக்கு உடல் வெப்ப பரிசோ தனை செய்து ரயிலில் ஏற் றினர். இதேபோல், கோவை வடக்கு, பொள்ளாச்சி, சூலூர், கிணத்துகடவு ஆகிய பகுதிக ளில் இருக்கும் பீகார் மாநிலத் தவர்கள் சனியன்று சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர். கோவை நகரம் மற்றும் மாவட் டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந் தவர்கள் அடுத்தகட்டமாக ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.
வட மாநிலத்த வர்களை முககவசம் கட்டாயம் அணியும் படி அறிவுறுத்திய காவல் துறையினர் , அவர்க ளுக்கு பயண டிக்கெட், இரவு உணவு, தண்ணீர், கை கழுவ சோப் போன்றவை வழங்கி ரயிலுக்கு அனுப்பப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட் டத்தில் கொரோனா தடுப்பு நட வடிக்கைகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றது. கோவை யில் வடமாநிலங்களை சேர்ந்த 1 லட்சம் தொழிலாளர்களை பணியாற்றி வருகின்றனர். இதில் 22 ஆயிரம் தொழிலா ளர்களை சொந்த விருப்பத்தின் பேரில் ஊருக்கு செல்ல விண் ணப்பித்துள்ளனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக் கப்பட இருக்கின்றனர். ஓடிசா, உத்தரபிரதேசம், மேற்குவங் கம், ஜார்கண்ட், அசாம் மாநில தொழிலாளர்களை அனுப்ப நட டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் பேர் ஒரு வாரத்திற்குள் அவர்கள் சொந்த மாநிலம் அனுப்பப்படுவார்கள். இதற் கான செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவித் த்தார்.
ரயில்வே நிர்வாகத்தின் அடாவடி |
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லாரிகளில் அடைக்கப்பட்டு கோவை ரயில் நிலையத்திற்கு தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இது எல்லா தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதேபோல் பயணம் செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு, சோப்பு, முக கவசம் உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர் ர்வாகம் செய்திருந்தபோதும், கோவை மாவட்ட ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையத்திற் குள் தண்ணீர் உள்ளிட்ட தேவைகளை ஏற்படுத்துவ தில் அலட்சியம் காட்டியுள் ளது. இதுகுறித்து ஊடகத் தினர் கவனத்திற்கு வந்ததை யடுத்து செய்தி சேகரிக்க சென்ற எந்த ஊடகவியலா ளர்களையும் ரயில் நிலையத் திற்குள் ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இத னையும் மீறி சென்ற ஒரு சில ஊடகவியலாளர்களை பிடித்து மிரட்டும் நடவடிக் கையில் ரயில்வே காவல் துறையினர் மேற்கொண்ட னர். இதனையடுத்து ஊட கவியலாளர்கள் ஒன்றி ணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து பிடித்து வைக்கப்பட்ட ஊடகவிய லாளர்கள் விடுவிக்கப்பட் டனர். |