ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
மேட்டூர், ஜன. 13- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக இருந்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லா ததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இந்நிலையில் ஞாயிறன்று விநாடிக்கு 1006 கனஅடியாக இருந்த நீர்வரத்து திங்களன்று காலை நிலவரப்படி 1040 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாச னத்திற்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக் கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிக மாக சரிந்து வருகிறது. இதேபோல், ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதே நிலையில் நீடித்து வருகிறது.
மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிப்பு பயிற்சி
குமாரபாளையம், ஜன. 13- குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வனம் செய்யும் அமைப்பும், தேசிய பசுமைப்படையும் இணைந்து பள்ளி மாண வர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் பயிற்சியை வழங்கியது. விதைகளே பேராயுதம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. மேலும், இப்பயிற்சியில் மாண வர்கள் 1301 விதைப்பந்துகளை தயாரித்தனர். இந்த விதைப்பந்துகளை தரிசு நிலங்கள், சாலை யோரங்கள், அரசு நிலங்களில் வீசி மரம் செடிகள் வளர்க்க தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், வனம் செய்யும் அமைப்பின் நிர்வாகிகள் வருண் சுப்பிரமணியம், கதிர்வேல், குரு, பிரகாஷ், மோகன்தாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, பசுமைப் படை ஆசிரியர் மணிகண்டன் ஆகி யோர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று மாண வர்களை ஊக்கப்படுத்தினர்.
மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை நாமக்கல்லில் சிறப்பு முகாம்கள்
நாமக்கல், ஜன. 13- மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வாங்க நாமக்கல்லில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது:-நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகளும் மத்திய மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் பெறும் பொருட்டு தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறு வது அவசியமாகிறது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளது. இதில் ஏற்கனவே விண்ணப் பித்துள்ள, விண்ணப்பிக்காமல் விடுபட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் உரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். 1. மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை 2.ஆதார் அட்டை நகல் 3. புகைப்படம் - 2 4. குடும்ப அட்டை நகல் 5. வாக்காளர் அட்டை நகல் ஆகியவற் றினை விண்ணப்பத்துடன் ஒப்படைக்க வேண்டும். மேலும், முதல் கட்ட சிறப்பு முகாம் கள் ஜன. 20ஆம் தேதியன்று நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர் வட்டாரங் களிலும், ஜன. 21ஆம் தேதியன்று புதுச் சத்திரம், பரமத்தி, கபிலர்மலை வட்டா ரங்களிலும், ஜன. 22ஆம் தேதியன்று பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, எலச் சிப்பாளையம் வட்டாரங்களிலும், ஜன. 23ஆம் தேதியன்று ராசிபுரம், சேந்தமங் கலம், நாமகிரிப்பேட்டை வட்டாரங் களிலும், ஜன. 24ஆம் தேதியன்று வெண் ணந்தூர், மல்லசமுத்திரம், கொல்லிமலை வட்டாரங்களிலும் நடை பெறுகின்றது. இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் ஜன. 25ஆம் தேதியன்று நாமக்கல், எருமப் பட்டி, மோகனூர், வட்டாரங்களிலும், ஜன. 26ஆம் தேதியன்று புதுச்சத்திரம், பரமத்தி, கபிலர்மலை, வட்டாரங்களிலும், ஜன. 27 ஆம் தேதியன்று பள்ளிப்பாளையம், திருச் செங்கோடு , எலச்சிப்பாளையம், வட்டாரங் களிலும், ஜன. 28ஆம் தேதியன்று ராசி புரம், சேந்தமங்கலம் , நாமகிரிப்பேட்டை வட்டாரங்களிலும், ஜன. 29ஆம் தேதி யன்று வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், கொல்லிமலை வட்டாரங்களிலும் நடை பெறுகிறது. மத்திய மாநில அரசு வழங்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங் களை பெற இனிவரும் காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அவசியமா கிறது. எனவே இச்சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயனடய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுபானக்கடைகள் மூடல்
சேலம், ஜன. 13- சேலம் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜன. 16ஆம் தேதி யன்று மதுபானக்கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் சி. அ.ராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்துள்ளதாது:- தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50 உள் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நாள். 29.10.2012-ன்படி ஜன.16ஆம் தேதி யன்று திருவள்ளுவர் தினத்தை முன் னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல். 2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல். 3ஏ உரிமம் பெற்ற மதுபான கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் விடுதி மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும், விதியை மீறி மது விற்பனை செய் பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நாமக்கல், ஜன. 13- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் பொது மக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக் கைகள் குறித்து மொத்தம் 160 மனுக்கள் வரப்பெற்றது. இம்மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் என்.எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.