மேட்டுப்பாளையம், செப். 23- கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆங்கில கல்வி தேர்வு மையம் மேட்டுப் பாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி யில் ஸ்ரீ ஸ்ரீஷா கல்வி அறக்கட்டளை சார் பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை சார்பில் புதிய ஆங்கிலத் தேர்வு மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பள்ளியில் உள்ள டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா கலையரங்கில் திங்க ளன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் முனைவர் மணிமேகலை மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்தாஸ் முன் னிலை வகித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக தெற்காசிய மண்டல இயக்குநர் டி.கே. அருணாச்சலம் ஆங்கில தேர்வு மையத்தை திறந்து வைத்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான சான்றிதழை வழங்க அதனை நிர்வாக அறங்காவலர் முனைவர் மணிமேகலை மோகன் பெற்றுக்கொண்டார்.