tamilnadu

img

மேட்டுப்பாளையம்: சுவர் இடிந்து விபத்து பலியானோருக்கு அஞ்சலி

பொள்ளாச்சி, டிச.7- மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17  பேருக்கு  தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பொள்ளாச்சியில் அஞ் சலி செலுத்தப்பட்டது. பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சனியன்று நடைபெற்ற அஞ்சலி  நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் பி.திருமலைசாமி தலைமை வகித்தார்.  இதில் சிபிஎம்  பொள் ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகா லிங்கம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செய லாளர் மு,அன்பரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா  செய லாளர் கோவிந்தன்,  உதவி தலைவர் கே. ரவி, தபெதிக நகர செயலாளர் பழ. அசோக்குமார், சிஐடியு ஒருங்கிணைப்பா ளர் ஆர்.சேதுராமன், தமுஎகச சசிதரன், விஜயகுமார், முபாரக், கருப்புசாமி உள் ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ் சலி செலுத்தினர். முடிவில்,  தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் பொள்ளாச்சி தாலுகா பொரு ளாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.