tamilnadu

img

தென்னை சாகுபடி குறித்து விளக்கக் கூட்டம்

அவிநாசி, பிப். 24- தென்னை சாகுபடி குறித்த விளக்கக் கூட்டம் அவிநாசி அருகே திருமுருகன் பூண்டி ராக்கியாபாளையம் பொன்காளி யம்மன் கோயில் மண்டபத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.  வேளாண்மை துறை சார்பில் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். இதில் தென்னை மரங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள், தென்னை மரங்களில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வெள்ளை(ஈக்கள்)பூச்சி களை கட்டுப்படுத்தும் முறை, தென்னை மதிப்பு கூட்டல் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கான கடன் திட்டத் திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும், பேராசிரியருமான அனந்தராஜ், துணை இயக்குநர் வடிவேல், வேளாண்மை உதவி இயக்குநர் டி.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர்கள் லோகேஷ், வினோத், சின்ராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.