தருமபுரி, மே 20- நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணியை இழிவாக பேசிய பாஜக நிர்வாகி கரு.நாகராஜனை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தருமபுரியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடா ளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை, தொலைக்காட்சி விவாதத்தின் போது பாஜக நிர்வாகியான கரு.நாகரா ஜன் மிக மோசமான சொற்களால் இழி வாக பேசியதை கண்டித்தும், புதுக் கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, காட்டில் மர்ம மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல் துறையி னர் துரித விசாரணையை மேற் கொண்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரியும் தருமபுரி செங்கொடிபுரத் தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். மாவட்ட தலை வர் ஏ.ஜெயா, மாவட்ட துணைத் தலை வர்கள் கே.பூபதி, கே.சுசிலா மற்றும் நகர தலைவர் ரங்கநாயகி, செயலாளர் நிர்மலாராணி, நிர்வாகி தமிழ்மணி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.