பொள்ளாச்சி, ஜூலை 26 - புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப்பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் நடைபெற் றது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை 2019 ஐ உடனடியாக திரும்பப் பெறக்கோரி பொள் ளாச்சி மத்திய புதிய பேருந்து நிலையம் முன்பு வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. தாலுகா குழு உறுப் பினர் ஆர்.சேதுராமன் தலைமை யில் நடைபெற்ற இயக்கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன் சிறப்புரையாற்றினார். கோவை மாவட்டக் குழு உறுப்பி னர் வி.ஆர்.பழனிசாமி, பொள் ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், மமக சார்பில் ஷேக், தபெதிக இரா.மனோக ரன், தமுமுக கபூர், திமுக ஒன்றிய செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில் சிபிஎம் தாலுகா கமிட்டி உறுப்பினர் ரவி நன்றி கூறினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்தில் தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், தாலுகா கமிட்டி உறுப்பினர் பழனிச்சாமி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின்மாவட்டத் தலைவர் பி.லலிதாஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதேபோல், மூலப்பாளையத் தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு அய்யாசாமி தலைமை வகித்தார். ஈரோடு தாலுகா செயலாளர் எம். நாச்சி முத்து, பேராசிரியர் பெருமாள், வாசவி கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜெய் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.