tamilnadu

திருப்பூரில் தீவிரமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒருங்கிணைந்து கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், நவ. 15 – திருப்பூர் மாநகரில் டெங்கு  காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச் சல் பாதிப்புகள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அனைத்துத் தரப்பினர் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் மாவட்ட செயற் குழுக் கூட்டம் சி.சுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் உள்பட செயற்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: திருப்பூரில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மருத் துவமனை, ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் ஏராள மானோர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண் டும். குறிப்பாக சுகாதாரப் பணி, குடிநீர் விநியோகம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில்  அனைத்துத் தரப்பினரின் பங் கேற்புடன் தீவிர டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். 

சுகாதாரா சீர்கேட்டை களைந்திடுக

வீடுகள் மற்றும் வணிக நிறுவ னங்களிடம் திடக்கழிவு மேலாண் மைக் கட்டணம் என்ற பெயரில் சொத்து வரியுடன் குறிப்பிட்ட தொகை கூடுதலாக வசூலிக்கப்ப டுகிறது. ஆனால் திடக்கழிவுகளை அகற்றி நகரில் பொது சுகாதாரத் தைப் பாதுகாப்பதில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடி யவில்லை. பல்வேறு பகுதிகளில் பிரதான சாலைகள் முதல் குடி யிருப்புகளில் குறுக்கு வீதிகள் வரை ஆங்காங்கே குப்பைகள் பரவலாகத் தேங்கிக் கிடப்பதும், நாள் கணக்கில், வாரக்கணக்கில் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுவதும், இந்த சுகாதார சீர்கே டான நிலையில் ஈக்கள், பூச்சிகள் உற்பத்தியாகி நோய் பரப்புவது அதிகரித்துள்ளது.

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துக

அதேபோல் குடிநீர் விநியோ கத்தைப் பொறுத்தவரை நகரில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. பல பகுதிகளில் வாரம் ஒரு முறை தான், சில சமயம் 10, 15 நாட்கள் இடைவெளியில்தான் குடிநீர் விநி யோகம் நடைபெறுகிறது. இத்த கைய நிலையில் மக்கள் குடிநீர் தேவையை ஈடு செய்ய குடங்களில் பிடித்து பாதுகாத்து வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நாள்தோறும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் அனைத்துப் பகுதிகளிலும் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டால் குடிநீரைத் தேக்கி வைக்க வேண் டிய அவசியம் இருக்காது. இந்த சூழ்நிலையில் ஒருபுறம் குடிநீர் பற்றாக்குறையில் தவிப்பதுடன், டெங்கு கொசுக்கள் உற்பத்தி யாகும் என பாதுகாத்து வைத்தி ருக்கும் குடிநீரையும் டெங்குத் தடுப்பு நடவடிக்கை என குடிநீர் குடங்களைக் கவிழ்த்துவிட்டுச் செல்லும் நடவடிக்கை தொடர் கிறது. ஆகவே பாதுகாக்கப்பட்ட குடிநீரை மாநகராட்சி நிர்வாகம் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீராக வழங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். பிரதான குடிநீர் விநியோகக் குழாய் உள்பட பல பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாவதுடன், பொது வெளியில் நாள்கணக்கில் குடி நீர் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தி யாகும் வாய்ப்புள்ளதால், இது போன்ற சூழலில் உடனடியாக உடைப்புகளை சரி செய்வதுடன், குடிநீர், கழிவுநீர் பொது வெளி யில் தேங்குவதை உடனடியாக அகற்றவும், தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்துக

திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தினாலே அச்சுறுத் தும் டெங்கு தாக்குதலை பெரு மளவு கட்டுப்படுத்த முடியும். அத்துடன் அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் மட்டு மின்றி தனியார் மருத்துவமனை களிலும் தரமான சிகிச்சை கிடைப் பதை உறுதிப்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு விழிப்புணர்வு பிரச் சாரங்களை நகரெங்கும் மேற் கொள்ள வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மட்டுமின்றி பொது நல அமைப்புகளுடன் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பெருமளவு மேற்கொள்ள வேண் டும். டெங்கு காய்ச்சல் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்ப தற்குரிய மருத்துவ வசதி, மருத்து வமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றை அதிகரித்து தேவை யான முன்னேற்பாடுகளையும் சுகாதாரத் துறை தயார் நிலையில் செய்து வைத்திருக்க வேண்டும். 

நோய் பாதிப்பு இருட்டடிப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு களை கட்டுப்படுத்த ஒருங்கி ணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாறாக, பாதிப்பின் தன்மையைக் குறைத் துக் காட்டுவதற்கு அரசுத் தரப் பில் முயற்சி மேற்கொள்வதாகத் தெரிகிறது. இது கடும் கண்டனத் துக்குரியது. இருட்டடிப்பு செய்வ தன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்த்து விட முடியாது. உண்மை யான நிலையை அறிந்துணர்ந்து முழு வீச்சில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம், அரசு மற்றும் அனைத் துத் தரப்பினர் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொண் டுள்ளது.