ஊத்துக்குளி, ஜூலை 25- ஊத்துக்குளி அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊத்துக்குளி ஈஸ்வரன் கோவில் மைதா னத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஊத்துக்குளி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவையும்,மருந்து வழங்கும் பிரிவையும் புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் 24 மணி நேரமும் மருத் துவர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது. எக்ஸ்ரே, பரிசோதனைக் கூடம், அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவு மருத்துவர் செயல் பாட்டை உறுதிப்படுத்த வலியுறுத்தி ஊத்துக்குளி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் சிவசாமி தலைமை தாங்கினார். தாலுகா குழு உறுப்பினர்கள் கொளந்தசாமி, கை.குழந்தைசாமி, பெரிய சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.