திருப்பூர், மார்ச் 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினசாமி கடந்த 2002 ஆம் ஆண்டு சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது 18 ஆம் ஆண்டு நினைவுநாளான வெள்ளி யன்று வேலம்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவரது பணி கள் குறித்து நினைவு கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணி யம், மாவட்டக் குழு உறுப்பினர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர்கள் அ.உமாநாத், பி.பாபு, பி.சின்னச்சாமி, த. நாகராஜ், சி.ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.