tamilnadu

img

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

 திருப்பூர், ஜூலை 5- மிட்டாய் தருவதாக கூறி, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி காவ லாளிக்கு 14 ஆண்டு சிறை  தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (55). இவர் தனியார் வங்கி யில் காவலாளியாக பணி யாற்றி வந்தார். இந் நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகாதேவன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5  வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவ தாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல்  தொல்லை கொடுத்துள் ளார்.  இதுகுறித்து சிறுமி  தனது தாயிடம் தெரிவித் துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் துறையிடம் புகார் அளித் தார். இதன்பேரில் மகா தேவனை காவல்துறை யினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் மகாதேவனுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி வியாழனன்று தீர்ப்பளித்தார்.