tamilnadu

img

மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திடுக

கோவை, ஜுன் 14- மருத்துவர்களுக்கான பாது காப்பை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினரும், இந்திய மருத்துவ சங்கத்தினரும் இணைந்து கோவை அரசு மருத்துவமனை வளா கத்தில் வெள்ளியன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் மருத் துவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், அரசு மருத்து வர்களுக்கு ஆதரவாக தனியார் மருத் துவமனை சங்கத்தினரும் இணைந் துள்ளனர். அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட் டங்களில் மருத்துவர்கள் போராட்டங் களில் ஈடுபட்டனர்.  இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்து வர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல் லாத சூழல் இந்தியாவில் நிலவுகிறது. மருத்துவமனை பாதுகாப்புச் சட் டத்தை வலுப்படுத்த வேண்டும். மருத் துவர்கள் மீது தாக்குதல் நடத்துப வர்களுக்கு பிணை கொடுக்கக் கூடாது மருத்துவர்கள் மீதும், மருத் துவமனைகள் மீதும் தாக்குதல் நடத் தும் நபர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினரும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினரும் இணைந்து கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ரவிசங்கர், பொரு ளாளர் கனகராஜ், இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாரியப்பன், செயலாளர் சத்தியன் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு

இதேபோல், வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோட் டிலுள்ள  ஐஎம்ஏ மஹால் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் மாநில தலை வர் எஸ்.எஸ்.சுகுமார் தலைமை வகித்தார். தலைவர் ஜெயகுமார், பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். இதில் திரளானோர் கள் பங்கேற்றனர்.