tamilnadu

img

கணவர் மீது பொய் வழக்கு- கர்ப்பிணி பெண் போராட்டம்

கோவை, மார்ச் 2 -  கணவர் மீது போடப்பட்ட பொய் வழக் கினை திரும்ப பெற வலியுறுத்தி கர்ப்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் கலங்கல் ரோடு பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்த வர் லோகநாயகி. இவரது கணவர் மணி கண்டன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 11 ஆம் தேதியன்று மணிகண்டனின் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதால் அவருக்கும் பேருந்து  ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது.  இதில் ஓட்டுனருக்கு ஆதரவாக இந்து முன்னனியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில்  மணிகண்டன் புகார்  அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட  காவல்துறையினர் இந்துமுன்னணி பிரமுகர் மற்றும் பேருந்து உரிமையா ளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். புகார் கொடுத்த தன் கணவர் மீதே பல்வேறு  வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில், தன்னுடைய கணவர் மீது போடப்பட்ட பொய்யான வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி மனு அளிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த லோகநாயகி, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கண வருக்காக கர்ப்பிணி பெண் தீடீரென  ஈடுபட்டதால் போராட்டத்தில் ஆட்சியர்  அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடரந்து காவல் துறையி னர் கர்ப்பிணிப் பெண்ணை அழைத்து சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்த னர்.