மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
உதகை,பிப்.27- தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அமைதியான முறையில் நடை பெற்ற போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எருமாடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசி யல் கட்சியினர் மீது காவல்துறை பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட் டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல் வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஜனநாயக முறையில் போராடி வருகிறார்கள். இதன்ஒருபகுதியாக இந்தியாவின் தலைநகர் தில்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் அமைதியான முறை யில் நடத்து வந்த போராட்டத்தை சீர் குலைக்கும் வகையில் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும் பல் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஜனநாயக முறையில் அமைதியாக போராட் டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தி மத கலவரத்தை உருவாக்க முயன்ற சங்பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல் வேறு அமைப்புகளும் இணைந்து கடந்த பிப்.25 ஆம் தேதியன்று எரு மாடு பஜாரில் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப் பாட்டமானது அமைதியான முறை யில் நடைபெற்ற போதிலும், இதில் பங்கேற்ற அரசியல் கட்சி தலை வர்கள் உள்ளிட்ட பலர் மீது எருமாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது. காவல்துறையின் இத்தகைய பழிவாங்கும் எண்ணம், மக்களின் ஜனநாயக உரிமைக ளைப் பறிக்கின்ற நடவடிக்கையாக உள்ளது. எனவே, மக்களின் கோரிக்கைக் காக ஜனநாயக முறையில் இயக்கங் களை நடத்துவோர் மீதும், பங்கேற் பவர்கள் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிசீ லனை செய்து எருமாடு காவல் நிலை யத்தில் பதிவு செய்துள்ள இந்த பொய்வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளார்.