தருமபுரி, ஆக.9- கடத்தூர் அடுத்த வெங்கடதார அள்ளிபுதூரில், பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த வெ.புதூரில், 2013-2014ஆம் ஆண்டு ரூ.13லட்சம் மதிப்பில் இ-சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து 5 ஆண்டுகளாகியும், இந்த கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் வாரிசு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, திருமண நிதியுதவி பெறுதல், முதல் பட்ட தாரி சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற, 30 கி.மீ தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இத னால், பொதுமக்களுக்கு நேரம் மற்றும் பணம் விரய மாகிறது. எனவே, பூட்டிக்கிடக்கும் இ-சேவை மைய கட்டி டத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.