சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் பேச்சு
ஈரோடு, செப் 9- காடுகள் துாய்மை பெற, பாறு கழுகு களை பாதுகாப்போம் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் வி.நாகநாதன் தெரிவித்தார். ஈரோட்டில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சார்பில், பாறு கழுகு செழித் தல் பயிலரங்கம் திங்களன்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்கு னர் மற்றும் தலைமை வன பாதுகாவலர் வி.நாகநாதன் பேசுகையில், கடந்த காலங்களில், ஊருக்குள்ளும், வனத்திலும் கழுகுகள் இருந்தன. அவை இறந்த கால் நடைகளை உண்டு வாழ்ந்தன. தற்போது, ஊருக்குள் கழுகுகள் இல்லை. வனப்பகுதி யில் மட்டுமே வாழ்கின்றன. உலக அளவில் உள்ள 23 வகை கழுகு இனங்களில்,ஆசியாவிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் ஒன்பது வகை கழுகுகள் வாழ்கின்றன. இதில் சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதியில் நீண்ட மூக்கு கழுகு, வெண் முதுகு கழுகு, செங் கழுத்து கழுகு, வெள்ளைக் கழுகு என நான்கு உள்ளன. இறந்த கால் நடைகள் அழுகி, கிருமிகளை பரவவிடாமல் தடுத்து, அவற்றை கழுகுகள் உண்டு, சுற்றுச்சூழலை துாய்மையாக வைத்தி ருக்கும். வனத்தை துாய்மையாக வைத்திருப் பதில் கழுகின் பங்கு பிரதானம். கடந்த காலங்களில், இவ்வகை கழுகு கள், லட்சக்கணக்கில் இருந்தன. தமிழ கத்தில் ஆயிரக்கணக்கில் காணப்பட்டன. ஆனால் 1990 ஆம் ஆண்டிற்கு பின் ஆயி ரத்திற்கு பத்து கழுகுகள் தான் உள்ளன என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும், முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில்தான், இயற்கையாக கழுகுகள் வாழ்கின்றன. அவை காடுகளை விட்டு வெளியே வருவதில்லை. இவை உயரமான மரங்கள், மலைகளின் உச்சி யில் கூடு கட்டி வசிக்கும். அதற்கான சூழல் மாற்றத்தாலும் அதன் எண்ணிக்கை குறைகிறது. குறிப்பாக, மாடுகளுக்கான மடிவீக்கம், சுளுக்கு போன்ற நோய்க்கு பயன்படுத் தப்படும் ‘டைக்ளோபினாக்’ ஊசி மருந்தை உட்கொள்ளும். இம்மாடுகள் இறந்த போது, இவற்றை கழுகுகள் உண்டால், கழுகுகளும் இறந்து விடுகின்றன. இந்த மருந்து பயன்படுத்தவும், விற்கவும் தேசிய அளவில் தடை இருந்தும், சில வலி மருந்துகளில் இவை பயன்படுத்தப் படுவதால், கழுகுகள் அழிகின்றன. கடந்த மார்ச் மாதம் கழுகுகள் கணக் கெடுப்பு நடத்தினோம். அதில், வெண் முதுகு பாறு-120, கருங்கழுத்து பாறு- 21, செம்முக பாறு- 21 என கண்டறிந்தோம். காடுகள் துாய்மை பெற பாறு கழுகு களை காப்போம் என்ற முழக்கத்துடன், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து கிறோம். செப். 7 முதல் பல்வேறு நிகழ்ச்சி களை நடத்துகிறோம். இவை அழிவதில் இருந்து தடுக்கவும், இவற்றின் எண் ணிக்கையை அதிகரிக்கவும், ஐந்தாண்டு திட்டம் தயாரிக்கிறோம். அதில் மனிதத் தலையீடு குறைந்தாலே, பிரச்சனை குறை யும் என்பதையும் குறிப்பிடுகிறோம். தவிர, துவக்க காலத்தில் வனப்பகுதி யில் கால்நடை பட்டிகள் போடப்பட்டன. தற்போது முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் கூறினார். பயிலரங்கில் நிபுணர்கள் பாரதிதாசன், கிரிஸ் பாடன், சந்திரசேகர், ராமகிருஷ் ணன் உட்பட பலரும் கழுகு குறித்து பேசி னர்.