திருப்பூர், ஆக. 9 – காஷ்மீர் மாநிலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களைப் பார்ப்பதற்காக ஜம்முவிற்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா ஆகி யோரைக் கைது செய்து ஆண வத்தை வெளிப்படுத்தியுள்ள மத் திய அரசைக் கண்டித்து திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் குமரன் நினைவுப் பூங்கா முன்பாக வெள்ளியன்று மாலை நடத்தப்பட்ட இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் காஷ்மீர் பிரச்சனையை பாசிச மனப்பான்மையுடன் கையாளும் மத்திய பாரதிய ஜனதா அரசு, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை ஜனநாயக விரோத மாகவும், அடக்குமுறை ஆணவத் தின் உச்சமாகவும் தடுத்து நிறுத்தி கைது செய்ததைக் கண்டித் தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் உரையாற்றினர். இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.காளியப்பன் உள்பட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மத்திய அர சுக்கு எதிராகக் கண்டனம் முழங் கினர்.