tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 18 –  மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து கோவையில் புதனன்று வழக் கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மக்கள் ஒற்றுமையை சீர்கு லைக்கும் குடியுரிமை திருத்தச் சட் டத்தை திரும்பபெற வலியுறுத் தியும், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதை கண் டித்தும்,  ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலை கண்டித்தும் கோவை யில் புதனன்று வழக்கறிஞர்கள்  கண்டன முழக்கத்தை எழுப்பினர். கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற வாயில் முன்பு நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மு.ஆனந்தன் தலைமை தாங்கினார்.  இதில், திமுக வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கே.எம்.தண்டபாணி, விஜயசேகர் அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாசேதுங், செய லாளர் கோபால் சங்கர்,  ஜோதி,  பியுசிஎல் அமைப்பின் பாலமுருகன், முற்போக்கு வழக்கறிஞர் சங்கத் தின் வெண்மணி, புரட்சிகர வழக்க றிஞர் சங்கத்தின் ஆர்தர், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்க பண் ணீர் செல்வம் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங் கேற்றனர்.