திருச்செங்கோடு, டிச.6 - சட்டமேதை அம்பேத்கரின் 63ஆவது நினைவு தினத்தையொட்டி எல்ஐசி ஊழியர் மடிக்கணினி வழங்கி சிறப்பித்தார். காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் திருச்செங்கோடு கிளையில் சட்ட மேதை அம்பேத்கரின் 63ஆவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. இதன்ஒரு பகுதியாக, திருச்செங்கோட்டில் எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று பாண்டிச்சேரி கிளைக்கு மாறுதலாகி சென்ற காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகி அருண்குமார் தாமாக முன் வந்து ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியை அவ்வை கல்வி நிலையத்திற்கு வழங்கி னார். இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் வானமாமதியிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சேலம் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் இணைச்செயலர் மே.கணேஷ்பாண்டியன், மகளிர் துணைக் குழு அமைப்பாளர் எஸ்உஷா, ஆறுமுகம், சாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்திருக்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டது.