திருப்பூர், ஜூன் 19 - திருப்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிறுவ னத்தில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 140 பேருக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் புதனன்று வழங்கப்பட்டன. தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருப்பூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் கலந்து கொண்டு தொழிற் பயிற்சி பெறும் மாணவர்கள் 113 பேர், மாணவிகள் 36 பேர் என மொத்தம் 140 பேருக்கு மடிக்கணினிகளையும், அதற்கான பையையும் வழங்கினார். இந்நிகழ்வில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜன், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.