திருப்பூர், நவ. 20 – திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நிலவேம்புக் கசாயம் வழங்கும் முகாம்கள் நடைபெற்றன. வாலிபர் சங்கத்தின் சார்பில் ஜெ.ஜெ.நகர், விஜயபுரி கார்டன், கங்கா நகர், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. கங்கா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலை வர் பா.ஞானசேகர் பங்கேற்று முகாமைத் துவக்கி வைத் தார். ஒன்றியத் துணைத் தலைவர் செல்வக்குமார், கேச வன், சிவக்குமார், பவுனஅராஜ், முன்னாள் தலைவர்கள் பாண்டியன், மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். விஜயபுரி கார்டனில் முன்னாள் தலைவர் பாண்டுரங் கன் துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய தலைவர் சதீஸ் துணைத் தலைவர் ராஜாமணி, விக்னேஸ், மனோகர், இம்ரான், சிவக்குமார், ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெ.ஜெ.நகரில் முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன், மகாலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் தன்ராஜ், ஈஸ்வரன், பழனிச்சாமி, முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆத்துப்பாளையத்தில் முன்னாள் தலைவர்கள் குரு சாமி, சங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ஒன்றிய செயலாளர் எஸ்.அருள், மணிபாரதி,பாலாஜி, சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாம்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண் கள், குழந்தைகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிலவேம்புக் கசாயம் குடித்தனர். தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கடுமையாக பரவுவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் வருமுன் காப்பது என்கிற வகையில் சுகாதார நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முன்னெடுக்க வேண்டும், இதில் வாலிபர் சங்கத்தினர் மாநகராட்சி நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்து சேவை சார்ந்த பணி களை தொடர தயாராக இருக்கிறோம் என வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள் கூறினார். அத்துடன் இரண்டாம் கட்டமாக மேலும் 5 இடங்களில் இப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரி வித்தார்.