tamilnadu

img

வெள்ளகோவிலில் குப்பை அள்ளப்படாததால் சுகாதாரச் சீர்கேடு

வெள்ளகோவில், மே 24- வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளப்படாததால் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகி றது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் இரண்டாம் நிலை நகராட்சிக்குட்பட்ட முத்தூர் சாலை, மணியகாரர்பேட்டை பகுதியில் ஒரு மாத காலமாக நகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ள வராததால் குப்பை தேங்கி கிடக்கிறது. தற்போது அங்கு காற்று வீசி குப்பை சிதறி அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரி விக்கின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் குப்பை அள்ளப் படாமல் தேங்கி கிடந்து பொதுமக்களின் புகாரின் பேரில் குப்பை அள்ளப்பட்டது.  இந்நிலையில், மறுபடியும் வெள்ளகோவில் நகராட் சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பை அள்ளப்படா மல் தேங்கி கிடப்பதாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள் ளனர். மேலும், இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.