கோவை,பிப்.5- கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்ட ரங்கில் கொரானா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் புதனன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்ட ரங்கில் மாநகராட்சி ஆணையாளரும் தனி அலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை யில் கொரானா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதரத்துறை அலுவலர்களுடன் புதனன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளரும் தனிஅலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் பேசு கையில், கோவை மாநகராட்சியில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் துரிதமாக மேற் கொள்ள வேண்டும். பொதுமக்கள், மாணவர்கள் கூடும் பொது இடங்கள், பூங்கா, கல்லூரிகள், பள்ளிக ளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை சம்மந்தப் பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பொது மக்கள் காய்ச்சிய குடிநீரையே பயன்படுத்த வேண்டும் என்றும், வீதிகள், வீடுகள், அலுவல கங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராம ரிக்க வேண்டும் என்றார். மேலும். விமானங்களின் மூலம் வெளிநாடு களிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளை, விமான நிலைய மையத்துடன் இணைந்து பரிசோதனை செய்யவும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களை 28 நாட்கள் தொடர் கண்காணிப்புகளிலும் அவர்க ளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறையுடன் மாநகராட்சி இணைந்து இப்பணிகளை கவனமுடன் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், சுகா தார பணியாளர்கள் கொரானா காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அனைவரும் சுத்த மாக கைகளை கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை சம்மந்தப்பட்டவர்கள் துரித மாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் நகர் நல அலுவலர் கே.சந் தோஷ்குமார், மாநகராட்சி மருத்துவர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.