கோபி, மே 29- கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழனன்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொடக் குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யதது. இதில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம், கூகலூர், வெள்ளாளபாளையம் மற் றும் அயலூர் உள்ளிட்ட பல பகுதி களில் 300 ஏக்கருக்கும் மேல் பயிரிடப் பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த மொந்தன், கதளி, தேன்கதிர், பூவாழை, நேந்தினை மற்றும் செவ்வாழைகள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சூறைகாற்றினால் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், ஒவ்வொரு ஆண்டும் சூறைக் காற்றினால் வாழைகள் சேதமடை வதும், அதனை வருவாய்துறையினர் கணக்கெடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் எங்களுக்கான இழப்பீடுகள் வழங்குவதில்லை. தற்போது இந்த வாரத்திலே இரண்டா வது முறையாக மரங்கள் சாய்ந்துள் ளன. இன்னும், மழை தொடருமென வானிலை மையம் தெரிவித்துள்ள தால், மேலும் பயிரிடப்பட்ட வாழை கள் சேதமடைந்து விடுமோ என அச்சமாக உள்ளது. எனவே தமிழக அரசு சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும். தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டதை அமுல்படுத்த வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே, கடந்த இருமாதங் களாக அறுவடை செய்யப்பட்ட வாழைகள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டதால் விற்பனையின்றி விவசாயிக ளுக்கு பெரும் இழப்பீட்டை சந்திக்க வைத்தது. தற்போது இந்த மழை யால் முற்றிலுமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.