கோவை, ஆக.20- வடவள்ளி பகுதியிலுள்ள நியாய விலைக்கடை ஒன்றில் விநியோகிக்கப்பட்ட பாமாயில் பாக்கெட் டில் மண்ணெண்ணெய் கலந்திருந்ததால் பொதுமக் கள் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாநகராட்சியின் 18-வது வார்டு பகுதி யான வீரகேரளம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் ஜூலியா என்ற பெண் கடந்த 1 ஆம் தேதி பாமாயில் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை செவ்வாயன்று சமையலுக்கு பயன்படுத் துவதற்காக பாக்கெட்டை பிரித்த போது, அதில் மண்ணெண்ணெய் வாசனை வந்துள்ளது. இருப் பினும், சந்தேகத்தின் பேரில் வானலியில் எண் ணெய்யை ஊற்றி அடுப்பு பற்ற வைத்துள்ளார்.அப்போது, வானலி திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் பக்கத்து வீட்டு பெண்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களும், நியாய விலைக்கடையில் வாங்கிய பாமாயிலை சோதித்து பார்த்த போதுதான், அனைத்து பாமாயில் பாக்கெட்டுகளிலும் மண்ணெண்ணெய் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் புகாரளித்துள்ளனர். பாமாயில் பாக்கெட்டில் மண்ணென்னை கலந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.