tamilnadu

img

மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்த கே.சுப்பராயன் எம்பி.,

கோபி, மே 22- கோபிசெட்டிபாளையம் அருகே விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் கிரா மத்திற்கு சென்ற திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பா ளையம் வனசரகத்திற்குட்பட அடர்ந்தவ னப்பகுதியில் விளாங்கோம்பை பழங்குடி யின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்க ளது கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால், குண்டேரிப்பள்ளம் அணைப்ப குதியை ஒட்டி செல்லும் வனப்பாதையில் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண் டிய சூழ்நிலை உள்ளது. இக்கிராமத்தில் கல்வி கற்க வசதியில்லாததால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். ஆகவே, இக்கிரா மத்தில் ஆரம்பப்பள்ளி, சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று நீண்டகால மாக போராடி வருகின்றனர்.

 இந்நிலையில், இக்கிராமத்திற்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப் பராயன் நேரில் சென்று மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப் போது குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி யாகி உள்ளதால் ஆரம்பப்பள்ளி, தொகுப்பு  வீடுகள் கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். வனவிலங்குகள் கிராமத்திற்குள்  வருவதை தடுக்க அகழிவெட்டி மின்வேலி  அமைத்துத்தர வேண்டும். முதற்கட்டமாக  சாலை வசதியும், பகுதி நேர நியாய விலைக டையும் தேவை எனவும் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர்.  இதனை கேட்டுக்கொண்ட நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி.,  இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் இக்கிராமத்திற்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தரு வதாக உறுதியளித்தார். இதனைதொ டர்ந்து, அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்து  குறைகளை கேட்டறிந்தார்.