தோழர் அரூர் எஸ்.பி.சின்னராசு உருவப்படத்துக்கு
தருமபுரி, அக்.10- தோழர் அரூர் எஸ்.பி.சின்ன ராசு உருவப்படத்திற்கு வியாழ னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் சங்கிவாடி கிராமத்தைச் சேரந்தவர் எஸ்.பி.சின்னராசு (56). இவர் 1979ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் உறுப்பினராக இணைந் தார். கட்சியின் தருமபுரி மாவட்ட குழு உறுப்பினராகவும், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச்செயலாளராகவும் பொறுப்புவகித்தார். அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட அமைப்பாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். தருமபுரி மாவட்டத்தில் மலை வாழ் மக்கள் சங்கத்தின் வளர்ச்சிக் காகவும்,அரூர்பகுதியில் கட்சி யின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர் தோழர் எஸ்.பி.சின்ன ராசு. இவர் அக்டோபர் 4ஆம் தேதி யன்று மாரடைப்பால் கால மானார். இந்நிலையில் வியாழனன்று அவரது சொந்த ஊரான அரூர் வட்டம் சங்கிலிவாடி கிராமத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தோழர் எஸ்.பி.சின்னராசு உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரி வித்தார். உடன் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.முத்து, ஆர்.சிசுபாலன், ஒன்றிய செயலாளர்கள் அரூர் ஆர்.மல்லிகா, மொரப்பூர் கே.தங்க ராசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.வி.மாது, சி.வேலாயுதம், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் பி.குமார், வட்டச் செய லாளர் எஸ்.கே.கோவிந்தன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் இ.கே.முருகன் மற்றும் பி.சங்கு, பழனி, வேடியப்பன் ஆகியோர் உடனி ருந்தனர்.