tamilnadu

img

பாஜக-வினால் சீரழிக்கப்படும் நீதி, நிர்வாகம், நாடாளுமன்றம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., குற்றச்சாட்டு

கோவை, அக். 2- மத்திய பாஜக ஆட்சியில் நீதி, நிர்வாகம், நாடாளுமன்ற ஜனநா யகம் அனைத்தும் திட்டமிட்டு சீர ழிக்கப்படுகிறது. இதனை மீட்டெ டுக்கும் போராட்டமானது இடது சாரிகள், ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் கடமையாக உள் ளது என இந்திய கலாச்சார நட்பு றவுக் கழகத்தின் மின் இதழ் துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார். இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் இஸ்கப் மின் இதழ் துவக்க விழா நிகழ்ச்சி வெள்ளி யன்று கோவை காட்டூர் தியாகி கள் நிலையத்தில் நடைபெற் றது. இஸ்காப் மாநில பொதுச்செய லாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எம்.வி.ராஜன் வரவேற்றுப் பேசினார். கே.சுப்பி ரமணியன் அறிமுக உரையாற்றி னார். காந்திகிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந் தர் மார்க்கண்டன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிறுவனர் ஹாஜி ஜெ.முகமது ரஃபி, ப.பாரமணி, எஸ்.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பி.ஆர்.நடராஜன் பேசு கையில், நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம், நீதித்துறை, நிர்வா கத்துறை இவை அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகிறது. ஆளும் பாஜக அரசு ஜனநாயக முறை களை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் நாடாளுமன்ற ஜனநாய கத்தை ஒரு தேவையற்ற ஏற்பா டாக கருதுகிறார்கள். நாடாளு மன்றத்தில் ஒரு உறுப்பினர் கேட் டாலும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், விவசாயிக ளுக்கு எதிரான சட்டங்கள் விவா தத்துக்கு வந்தபோது அதை நாங் கள் எதிர்த்தோம், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி னோம். ஆனால், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சட்டம் நிறை வேற்றி விட்டதாக அறிவித்துவிட் டார்கள்.

கேள்விக்குள்ளாக்கப்படும் நீதித்துறை

இதேபோலத்தான் நீதித்துறை யின் செயல்பாடும் உள்ளது. அமித்ஷா மீதான கொலைக் குற்ற வழக்கை விசாரித்த நீதியரசர் சதாசிவம், பின்னர் கேரளா மாநில ஆளுநராக நியமிக்கப்படுகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை யின்போது சேகர் ரெட்டி வீட்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கள் கோடிக்கணக்கில் கட்டுக்கட் டாக பிடிக்கப்பட்டது. வங்கிக ளுக்கே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வராதபோது அவர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இதை அவர்கள் தான் படம் பிடித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி னார்கள். ஆனால், தற்போது அதற் குப் போதிய ஆதாரம் இல்லை என் கிறார்கள்.  

தற்போது, உத்தரப்பிரதேசத் தில் இளம்பெண் பாலியல் பலாத் காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய உடல் அவசர அவசர மாக எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்ப வத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் முந்திக் கொண்டு அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கருத்து சொல்லு கிறார். இவ்வாறு நாட்டினுடைய மதச்சார்பற்ற தன்மையை, ஜன நாயகத்தை, நீதியின் நேர்மையை பாஜக அரசு சீர்குலைத்து வருகி றது. இவற்றை காப்பாற்ற வேண்டி யது இடதுசாரிகள் மற்றும் ஜன நாயக சக்திகளின் கடமையாக இப் போது முன் நிற்கிறது. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.

குவியலாக்கப்படும் அதிகாரம் நல்லதல்ல...

இதைத்தொடர்ந்து, காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் முன் னாள் துணைவேந்தர் என்.மார்க் கண்டன் பேசுகையில், உலகம் காந்தியை திரும்பிப் பார்த்துக்  கொண்டிருக்கிறது. காந்தி பத வியை நாடவில்லை, ஆனால் நாட் டில் எங்கெல்லாம் அநீதி இழைக் கப்பட்டு கொண்டு இருந்ததோ அங்கெல்லாம் அவர் சென்றார். நாட்டின் பன்முகத்தன்மையை நன்றாக புரிந்து வைத்திருந்தார். மதுரைக்கு வந்தவர் தன்னுடைய உடையை மாற்றிக்கொண்டார். அந்த உடையோடு தான் லண்டன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். கூட்டாட்சி தத்து வத்தை ஆதரித்த காந்தி, அதிகா ரம் பரவலாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், தற்போது அதிகாரம் குவியலாக் கப்பட்டு வருகிறது. இது எதிர்கா லத்திற்கு நல்லதல்ல என வேதனை தெரிவித்தார்.