tamilnadu

img

ஆளுங்கட்சியினரால் தாக்கப்படும் செய்தியாளர்கள் - வேடிக்கை பார்க்கும் காவல்துறை

கோபி, ஜூன் 28- ஆளுங்கட்சியினரால் செய்தியாளர்கள் தாக் கப்படுவதும், அதனை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதை கண்டித்தும் கோபி பேருந்து நிலையத்தில் பத்திரிகை யாளர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு குமலன்குட்டை அரசுப் பள்ளியில் கடந்த திங்கட்கிழமையன்று ( ஜூன் 24) மாணவ, மாணவிகளுக்கு தமிழக அர சின் விலையில்லா மடிக்கணினி  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  அரசு விழாவில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்ன ரசு, ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் மற்றும் ஈரோடு காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்ற னர். இந்த நிகழ்ச்சியில் கடந்தாண்டு கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் தங் களுக்கு தற்போதுவரை மடிக்கணினி கிடைக்காதது தொடர்பாக சட்டமன்ற  உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளனர்.  அப்போது, அம்மாணவர்களை ஆளும்  கட்சியின் நிர்வாகிகள் ஒரு வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றனர். இதனை கண்ட ஜூனியர் விகடன் செய்தியாளர் நவீன்  மற்றும் தமிழ் இந்து நாளிதழின் செய்தி யாளர் எஸ்.கோவிந்தராஜ் உள்ளிட்ட சில செய்தியாளர்கள் மாணவர்களை அழைத்து செல்லப்பட்ட வகுப்பறை அருகே சென்றனர். அப்போது அங்கி ருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி மேற்குறிப்பிட்ட இரு செய்தி யாளர்களையும் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இத்தாக்குதலில் படு காயமடைந்த நிருபர்கள் இருவரும்  ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.  இந்நிலையில், பத்திரிகைச் சுதந்தி ரத்தை நசுக்கும் வகையிலும், செய்தியாளர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தியதைக் கண்டித்தும்,  சமீபகாலமாக போராட்டச் செய்தி களைச் சேகரிக்கச் செல்லும் பத்திரிகை யாளர்களை ஆளுங் கட்சியினர் தாக்குவதும், அத்தாக்குதலைக் காவல் துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் தொடர் கதையாகி வருவதை கண்டித்தும் கோபி பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கோபி பேருந்து  நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பத்தியாளர்களின் பாதுகாப்பிற் குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.