கோவை, பிப். 20 - கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகிற பிப்.23 ஆம் தேதியன்று கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு நடை பெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைத்து ஏற்பாடு களும் முழுமையாக நடைபெற்றுள்ளதாக ஜல்லிக்கட்டு சங்க தலைவர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் நடைபெற வுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாட்டு பணிகளை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன், செயலாளர் தங்கவேலு, தமிழ்நாடு ரேக்ளா பேரவை தலைவர் அர்ஜூனன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஜல்லிக் கட்டு நடைபெறும் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வை யிட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன் கூறுகை யில், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற பிப்.23 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியானது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய கேலரி அமைத்து மக்களுக்கு தீங்கு இல்லாமல் இருக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளோம். மக்களுக்கு தண்ணீர் வசதி, உணவு வசதி மற்றும் பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு மாட்டு காளைகள் கண்காட்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். இதில், 750 முதல் 900 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியில் காயமடைவோர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்க உள்ளதாகவும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்க ளுக்கும் பார்வையாளர்களுக்கும் முதல் முறையாக இன்சூரஸ் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.