tamilnadu

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திடுக

ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அவிநாசி, செப். 6- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள் ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்து ணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்புற நூலகர்கள் உள் ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு அறிவித்துள்ள மழலை யர் பள்ளிக்கு, புதியதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தொடக்க பள்ளியை, மேல்நிலை பள்ளியுடன் இணைக்கக் கூடாது.  2019 ஜனவரி போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 17பி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அவிநாசியில் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளி யன்று ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  நா.வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ் ணன், பி.ரமேஷ்குமார் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.  முடிவில், ரங்கசாமி நன்றி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உடுமலை

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உடு மலை, குடிமங்களம் ஒன்றிய ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், ஊழி யர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் எம்.பாலசுப்ரமணியம் சிறப்புரை யாற்றினார். உடுமலை மற்றும் குடிமங்க ளம் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தி.திலீப் நன்றி கூறினார்.