tamilnadu

img

காந்தியை மகாத்மாவாக மாற்றியது புத்தகங்களே

அன்னூர் புத்தக திருவிழாவில் எழுத்தாளர் கோவை சதாசிவம் பேச்சு

அன்னூர், நவ. 22- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவாக மாற்றியது புத்தகங் களே என அன்னூர் புத்தக திருவிழா வில் எழுத்தாளர் கோவை சதாசிவம் தெரிவித்தார். புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை மற்றும் அன்னூர் சிற்பி அமைப்பின் சார்பில் 2 ஆவது அன்னூர் புத்தக திருவிழா வியாழனன்று துவங்கியது. சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசி னார். அப்போது அவர் பேசுகையில், பெரு நகரங்களில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கிராமப்புற ஏழை  மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்ப தில்லை. இதேபோல் நகராட்சி, பேரூராட்சி அளவில் நடைபெறும் புத்தக திரு விழாக்கள் கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்கு ஒரு வரம். சிறிய ஊர்களில் புத்தக கண்காட்சியை நடத்திவரும் விடியல் அறக்கட்டளை மற்றும் சிற்பி அமைப்புக்கு பாராட் டுக்கள். மேலும், நல்ல நூல்களே நல்ல  நண்பர்கள். சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவாக மாற்றியது புத்தகங்கள் தான். இன் றைக்கு ஒரு வருடத்தில் ஆயிரக்கணக் கான புத்தகங்கள் வெளிவருகின்றன. பதிப்பாளர்களுக்கு இன்றைக்கு இருக் கும் ஒரே சந்தை புத்தக திருவிழாக்கள் தான். இளைய தலைமுறையினர் புத்தக வாசிப்பை நேசிக்க வேண்டும். புத்தகங்கள் நமக்கு ஒரு நாட்டின் பண் பாட்டை, கலாசாரத்தை, புதிய கண்டு பிடிப்புகளை, வரலாற்றை, தன்னம் பிக்கையை நமக்கு அறிமுகப்படுத்தும். மாணவ சமுதாயம் பாட புத்தகங்க ளோடு நல்ல நூல்களை வாங்கி படிக்க வேண்டும். இத்தகைய புத்தக திரு விழாக்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். இந்நிகழ்ச்சியில் விடியல் அறக் கட்டளை செயலாளர் எஸ்.ஜெய காந்தன், சிற்பி ரங்கநாதன், தமிழா சிரியர் தாமோதரசாமி, ஆசிரியர் பெரியசாமி மற்றும் மாணவ, மாண வியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  பங்கேற்றனர்.