கோவை, மே 9- புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் ரயில்வே நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளதா என்பதை செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை கோவை ரயில்வே நிர்வாகம் தடுத்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தவறு செய்கி றவர்கள் ஊடகத்தை கண்டு அஞ்சுவது இயல்பு. ஆனால், கோவை ரயில்வே நிர்வா கம் அஞ்சுவதன் பின்னணியில் குளறுபடி கள் உள்ளதோ என்கிற ஐயம் எழுவதாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேள்வி எழுப்பி யுள்ளார். இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புலம் பெயர்ந்த வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விருப்ப கடிதம் பெறப்பட்டு தமிழக அரசால் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்படுகி றார்கள். இதன்ஒருபகுதியாக கோவையி லும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் தங்க ளது கடமைகளை சரிவர நிறைவேற்று கிறார்களா என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது ஊடகத்தினரின் கடமை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் என்கிற பேரிடர் காலம் என்றாலும் தங்களது கட மையை திறம்பட ஊடகவியலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், கோவை ரயில்நிலை யத்தில் பயணிகளுக்கு செய்யபட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அனும திக்க முடியாது என கோவை ரயில்நி லைய ஏடிஆர்எம் ரயில்வே காவலர்களை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளார் என்கிற தகவலும், சில ஊடகவியலா ளர்களை சிறைபிடிப்பதுபோல் பிடித்து வைத்தனர் என்கிற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தவறு செய்பவர்கள் ஊட கத்தை கண்டு அஞ்சுவது இயல்பானது. கோவை ரயில்வே நிர்வாகம் ஊடகத்தை கண்டு அஞ்சுவதற்கான காரணம் புதிராக இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கையில் பல்வேறு தகவல்கள் வருகின்றன. ரயில்நிலையத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த விடா மல் பூட்டி வைத்திருப்பதாகவும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றும், ரயில் பெட்டிகள் சுகாதாரமாக இல்லை என்றும், பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தரப்படவில்லை என அடுத்தடுத்து புகார் கள் வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதன் காரண மாகத்தான் ஊடகத்தினரை அனுமதிக்க வில்லையா என்கிற சந்தேகமும் வருகிறது. சிறந்த ரயில்நிலையம் என்கிற ஆதார் சிறப்பு அந்தஸ்து பெற்றது கோவை ரயில்நிலையம். இத்தகைய பெருமையை சீர்குலைக்கும் விதமாக கோவை ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை ஏற்க முடி யாது. இந்த சிறப்பு ரயில்களில் செல்பவர்கள் யாரும் இலவசமாக செல்லவில்லை. அதற் கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட நிர்வாகம் பயணச்சீட்டை ஒவ்வொருவ ரிடம் கொடுத்துத்தான் தொழிலாளர்கள் அனுப்பப்படுகின்றனர். உடனடியாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்வதை உறுதிப்படுத் தவும், ரயில்நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதருவதை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். நாங்கள் பொறுப்போடுதான் செயல்படுகிறோம் என்பதை உறுதிப்ப டுத்த ரயில்நிலையத்திற்குள் ஊடகவியலா ளர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதேபோல் பேருந்து வசதிகள் ஏதும் இல்லாததால் கோவை ரயில்நிலையத் திற்கு வந்து சேரவேண்டிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், கோவில்பாளையம், சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து நடந்தே வருகின்றனர். இந்த சாலைகளில் சாரை, சாரையாக இத்தொழி லாளர்கள் நடந்தே வருவது வேதனையை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் லாரிக ளில் ஆட்டு மந்தைகளை ஏற்றுவதுபோல ஏற்றி ரயில்நிலையம் கொண்டு வருகின்ற னர். எப்படியாவது ஊர் போகவேண்டும் என்கிற தொழிலாளிகளின் எண்ணமும், எப்படியாவது இந்த ஊரில் இருந்து கிளம்பினால் சரி என்கிற நிர்வாகத்தின் நடவடிக்கையும் ஏற்புடையதல்ல. உடனடி யாக மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட அளவி லான பேருந்தை இயக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் இத்தொழி லாளர்களை ஏற்றி கோவை ரயில் நிலை யத்தில் இறக்கிவிடுவதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வேலையிழந்து, வருவாய் இழந்து, பசி, பட்டினி என்கிற கொடும்துயரத்தை சுமந்து கொண்டு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும்போதாவது உரிய வசதிகளுடன் செல்ல உரிய ஏற்பாடு களை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ரயில்வே நிர்வாகம் செய்துதர வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ் வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தி யுள்ளார்.