tamilnadu

ஆம்புலன்ஸ் வராததால் கொரோனா பாதித்தோர் மருத்துவமனைக்கு நடந்தே சென்ற அவலம்

பொள்ளாச்சி, ஜூலை 29- பொள்ளாச்சியில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கொரோனா பாதித்தோர்  அரசு மருத்துவமனைக்கு  நடந்தே  சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில்  குடிநீர் வாரியத்தில் பணி யாற்றும் ஊழியர் ஒருவருக்கும், பொள்ளாச்சி அடுத்த ஆர்.பொன்னாபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், உடுமலையைச் சேர்ந்த ஒருவருக்கும் செவ்வாயன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொரோனா முகாமில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக 108 ஆம்புலன்சிற்கு அழைத்துள்ளனர். ஆனால், ஆம் புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் நோயாளிகள் மூவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்றுள் ளனர். இதுதொடர்பாக, பொள்ளாச்சி அரசு மருத்துவ மனை ஊழியர்கள் சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத் துள்ளனர். இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;