tamilnadu

கொரோனாவினால் தனிமைப் படுத்தப்பட்டவர் வீட்டில் திருட்டு

கோவை, அக்.19-   கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்றுள்ள சம்ப வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (50).  கடந்த சில தினங்க ளுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டது. இதன்பின் சிகிச்சை முடிந்து கடந்த 16 ஆம் தேதி வீடு திரும்பிய முரளி வீட் டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வீட்டின்  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கரில் வைக்கப்பட்டி ருந்த 8 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 2 ஆயிரத்து 300 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து முரளி பந்தய சாலை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொரோனா சிகிச்சைக்காக சென்றவர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.