tamilnadu

img

வாக்குரிமை பறிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் அரசியல் சட்ட உரிமையை மறுப்பது நியாயமா?

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கும் உரிமை பெற்றிருக்கும் திருப்பூர் மாவட்ட மலைவாழ் மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் வாக்குரிமை மறுக்கப்பட்டவர் களாக உள்ளனர்.  இந்நாட்டு குடி மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையை நிலை நாட்ட, இந்த மலை மக்கள் அரசு நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்டும் இதுவரை வாக்குரிமையை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சோகம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உடு மலைபேட்டையை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் 18 செட்டில் மெண்டுகள் உள்ளன. மாவடாப்பு, குழிப்பட்டி, குறுமலை, திருமூர்த்தி மலை, மேல் குறுமலை, ஈசல் திட்டு, ஆட்டுமலை, கருமுட்டி, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சிவயல், கரட்டுப்பதி, காட்டுப்பட்டி, பொறுப்பாறு, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம், புளி யம்பட்டி உள்ளிட்ட இந்த செட்டில் மெண்ட்களில் மொத்தம் 4 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,200 ஆகும்.

பறிக்கப்பட்ட வாக்குரிமை

இவர்களுக்கு சட்டமன்றத் தேர்த லில் மடத்துக்குளம் தொகுதியிலும், நாடாளுமன்றத் தேர்தலில் பொள் ளாச்சி தொகுதியிலும் வாக்குரிமை உள்ளது. ஆனால் உள்ளாட்சித் தேர் தலில் மட்டும் வாக்குரிமை இல்லை. இது குறித்து இந்த மலைகளில் வசிக்கும் மூத்த குடிமக்களைக் கேட்டால் 1980, 90களில் உள் ளாட்சி தேர்தல்களில் வாக்களித்தி ருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அதன் பிறகு உள்ளாட்சி வாக்குரிமை என்பது மறுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் செல்வன் கூறுகையில், மலை மக்களுக்கு ராவணாபுரம், கல்லாபுரம், மானுப்பட்டி ஆகிய மூன்று ஊராட்சிகளிலும், தளி பேரூ ராட்சியிலும் அந்தந்த பகுதி சார்ந்த செட்டில்மெண்ட்கள் இணைக்கப் பட்டு வாக்குரிமை இருந்தது. ஒரு சமயம் உள்ளாட்சித் தேர்தலில் மேற்கண்ட ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சியில் மலை மக்கள் சார்பாக போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. உள்ளாட்சிகளில் அதுவரை வாக்களித்து மட்டுமே வந்த மலை மக்கள் வார்டு உறுப்பினர்களுக்கும் போட்டியிட வந்து விட்டனர் என்ற நிலையில் அதை தடுப்பதற்கு பிர தான அரசியல் கட்சிகளைச் சேர்ந் தோர் சூழ்ச்சி செய்தனர். வேட்பு மனு பரிசீலனைக்குச் சென்றபோது, மேற்கண்ட ஊராட்சிகளிலும், பேரூராட்சியிலும் உங்களுக்கு வாக் குரிமை இல்லை, எனவே போட்டி யிட முடியாது என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் தாங்கள் ஏற்கெனவே வாக்குரிமை பெற்றி ருந்த விபரத்தைக் கூறியுள்ளனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் செட்டில்மெண்டுகளைச் சேர்ந்த மலை மக்கள் மொத்தமாக நீக்கப் பட்டதாக சீலிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் எடுத்துக் காட்டினர். இவ்வாறு பிரதான அரசியல் கட்சி யினரின் அதிகாரத்தை எதிர்த்து மலைமக்கள் போட்டியிட துணிந் ததை சகித்துக் கொள்ள முடியாமல் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மலை மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டனர் என்று செல்வன் தெரிவித்தார்.

முறையீடுகள், போராட்டம்
எனினும் தங்கள் வாக்குரிமையை நிலை நாட்ட மலை மக்கள் தொடர்ச்சி யாக பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டனர். தமிழக அரசுக்கும், தலைமைச் செயலாளருக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என அதிகாரி களுக்கு மனுக்கள் மேல் மனுக்கள் போட்டும் எந்த மாற்றமும் இல்லை.  இந்நிலையில் ஒருமுறை உள் ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றபோது தளி பேரூ ராட்சி, ராவணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளை முற்று கையிட்டு தங்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று போராட்டம் நடத் தினர். முறையீடுகள், போராட்டம் நடத்தியும் இன்றைக்கு வரை அர சியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையை இம்மக்களுக்கு நிலை நாட்ட தவறி வருகிறது அதிகார வர்க்கம்.

பல வகை பாதிப்புகள்
உள்ளாட்சியில் வாக்குரிமை இல்லாததால் பல வகையிலும் பாதிப்பைச் சந்தித்து வருவதாக இம்மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக குடிநீர் தேவை என்றால்கூட யாரி டம் கோரிக்கை வைப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஊராட்சி ஒன்றியத்தை அணுகி னால் உள்ளாட்சி நிர்வாகத்தில் இல்லாததால் மலை மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று மறுக்கின்றனர். வனத்துறையைத் தொடர்பு கொண்டால் அவர்களும் கைவிரித்து விடுகின்றனர். குடிநீர் மட்டுமின்றி உள்ளாட்சி மூலம் நிறைவேற்றப்படும் குறைந்தபட்ச நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் கூட இந்த மலை மக்களுக்கு எட்டாக் கனியாக உள்ளன. உள்ளாட்சியில் இல்லாததால் நூறு நாள் வேலைத் திட்டத்தில் இங்குள்ள வறிய மக்க ளுக்கு வேலை தரக்கூட மறுக்கின் றனர். எந்த வசதியும் கிடைப்ப தில்லை. இதுதான் சுதந்திர இந்தியா வில் இறையாண்மை மிக்க அரச திகாரம் ஆயிரக்கணக்கான மலை வாழ் மக்களை மதிக்கும் லட்சணம். தற்போதுள்ள எடப்பாடி அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்து வதற்கு கண்ணாமூச்சி ஆடி போக்குக் காட்டி வருகிறது. உச்சநீதிமன்றம் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்த லுக்கான அறிவிக்கை செய்ய வேண் டும் என கெடு நிர்ணயித்து உள்ளது. இனிமேலாவது இந்த மலை மக்க ளுக்கு வாக்குரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பதே இவர்களின் மறுக்க முடியாத, நியாயமான எதிர் பார்ப்பாக உள்ளது. இதைச் செய்ய வேண்டியது அரசின் கருணையல்ல, கடமை!

புதிய ஊராட்சிகளை உருவாக்குக!

கடந்த கால அனுபவத்தை கணக் கில் கொண்டால் இந்த 18 செட் டில்மெண்ட் பகுதிகளை சம வெளிப் பகுதி ஊராட்சிகள், பேரூ ராட்சியுடன் இணைப்பது சரியாக வராது. எனவே மலைகளில் உள்ள செட்டில்மெண்டுகளை அதன் நில அமைப்புக்கு ஏற்ப  வரையறுத்து மூன்று தனி ஊராட்சிகளாக ஏற்ப டுத்த வேண்டும். மலை வாழ் மக்க ளின் வாக்குரிமையை நிலைநாட் டுவதுடன், அப்பகுதி உள்ளாட்சி பணிகள் நடப்பதையும் உத்தரப் படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநி லத் துணைச் செயலாளர் செல்வன் கூறினார். வாக்குரிமையை உத்தரவாதம் செய்வதன் மூலம் இவர்கள் சுதந்திர நாட்டின் குடிமக்கள்தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை! இனியாவது செய்வார்களா?

- வே.தூயவன்