கோவை, பிப். 28 - கோவையில் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த விவ காரம் தொடர்பாக இருவரிடம் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக் குநர் டி. சரவணன் விசாரணை நடத்தி னார். கோவை மாவட்டம், செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் கண் காணிப்பாளராக பிரபு என்பவரும், ஓட் டுநராக சுரேஷ் பாபு என்பவரும் பணி யாற்றி வந்தனர். இருவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆர்.டி.ஒ. அலுவலகம் உள்ளிட்ட அரசு துறைச் சார்ந்த அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் பெற் றுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் உறுதியளித்தபடி வேலை வாங்கி தராமல் இழுத்த டித்து வந்துள்ளனர். இதனால் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து ஏமாந் தவர்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் ஆகி யவற்றில் புகார் அளித்தனர். 21 பேர் அடுத்தடுத்து புகாரளித்த நிலையில் பிரபு மற்றும் சுரேஷ்பாபு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிரபு மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் மீதான புகார் தொடர் பாக, கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அத்துறை யின் இணை இயக்குநர்டி.சரவணன் நேரடியாக விசாரணை மேற்கொண் டார். அவ்விருவரும் ஆஜரான நிலை யில், பாதிக்கப்பட்டவர்களையும் வர வழைத்து நேரடியாக விசாரணை மேற் கொண்டார். இந்த விசாரணையில் இருவர் மீதான புகார் நிரூபிக்கப்பட் டால், காவல் துறை வசம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட லாம் என கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரலாம் என தகவல் வெளியாகி யுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ”என்னிடம் பணத்தை பெற்ற பிரபு ஏற்கனவே வேறு சிலரி டம் பணத்தை பெற்று வேலை வாங்கி தந்துள்ளதையும், அவர்கள் பணியில் தற்போது உள்ளதையும் காட்டினார். இதனை நம்பியே நானும் சுமார் இரண்டு லட்சம் வரை கொடுத்துள் ளேன். இந்நிலையில், பல மாதங்கள் ஆகி யும் வேலை வாங்கி தராததால் சந்தேக மடைந்து விசாரித்ததில் நிறைய பேரி டம் பணத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது என்றார். மேலும், நாங் கள் கொடுத்தப் பணத்தை மீட்டு தர வேண்டுமென வேதனை தெரிவித் தார்.