பொள்ளாச்சி, ஜூன் 17- பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில் இலக்கிய சந்திப்புஞாயிறன்று பொள்ளாச்சி நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 74 வது இலக்கிய சந்திப்பு தலைவர் க.அம்சப்ரியா தலைமையில் நடைபெற் றது. இதில் மறைந்த பிரபல எழுத்தாளரும், நாடக மற்றும் திரையுலக கலைஞருமான க்ரிஷ் கர்னாட், கவிஞரும், மொழி பெயர்ப்பாளருமான ஸ்ரீபத்மநாபா, கிரேசி மோகன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் இரா.பூபாலன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கவிஞர் வசந்தன் எழுதிய ‘தச்சன் வீட்டு யானை பொம்மை‘ நூல் குறித்து கவிஞர் முகில் நிலா தமிழ்அறிமுகம் செய்து வைத்தார். கவிஞர் மீனா சுந்தர் எழுதிய ‘நித்திலப்பாவை‘ நூலினை எழுத்தாளர் பொன்.இளவேனில் அறிமுகம் செய்து வைத் தார். மேலும் கவிஞர் வேல்கண்ணன் எழுதிய ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்‘ என்ற கவிதை தொகுப்பினை கவிஞர் இளஞ்சேரல் அறிமுகம் செய்து பேசினார். கவிஞர் சித்து ராஜ் பொன்ராஜ் எழுதிய ‘சனிக்கிழமை குதிரைகள்‘ எனும் கவிதை தொகுப்பினை கவிஞர் வேல்கண்ணன் அறிமுகம் செய்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கவிதை அறங்கேற்றம் நடைபெற் றது. இதில் ஏராளமான கவிஞர்களும், இளம் படைப்பாளி களும், மாணவர்களும் தங்களது கவிதைகளை அறங் ங்கேற்றம் செய்தனர். எழுத்தாளர்கள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். சந்திப்பின் இறுதியில் கவி ஞர் சோலைமாயவன் நன்றிகூறினார்.