tamilnadu

img

தமுஎகச இலக்கிய சந்திப்பு – நூல் அறிமுகம்

பொள்ளாச்சி, ஏப். 30-பொள்ளாச்சியில் நடைபெற்ற தமுஎகச இலக்கிய சந்திப்பில் நூல் அறிமுகங்கள் நடைபெற்றது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் இலக்கிய சந்திப்பு ஞாயிறன்று கவிஞர் முருகானந்தம் தலைமையில் பொள்ளாச்சி பர்வானா நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி வி.சசிதரன் வரவேற்று பேசினார். இதனைத்தொடர்ந்து எழுத்தாளர் அகத்தியா எழுதிய வணக்கம் சிறுகதை தொகுப்பினை கவிஞர் எஸ்.அன்பரசு அறிமுகம் செய்து உரையாற்றினார். இதன்பின் நூலாசிரியர் அகத்தியா ஏற்புரையாற்றினார்.இதனைத் தொடர்ந்து கவிஞர் காலச்சித்தன் எழுதிய பால்வாசம் நுகரும் கொலுசு கவிதைத் தொகுப்பினை கவிஞர் நறுமுகைதேவி அறிமுகம் செய்து பேசினார். இதைத்தொடர்ந்து இளம் கவிஞர்கள் பலர் கவிதை அரங்கேற்றினர். இந்நிகழ்வில் தமுஎகசபொள்ளாச்சி செயலாளர் அபி, பி.பி.மகேந்திரன், மௌனம் இரமேசு, சூரியப்பிரகாஷ், கருக்கல் சுரேஷ்வரன், நிவேதிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;