tamilnadu

img

அரசு மேல்நிலைப்பள்ளியில் கிளாப்பிங் தெரபி அறிமுகம்

அவிநாசி, நவ. 11- அவிநாசி அருகே அரசு பள்ளியில் கிளாப்பிங் தெரபி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் அனைவருக்கும் தினமும் காலை கிளாப்பிங் தெரபி  நடத்தப்பட்டு வருகிறது. யோகாவின் ஒரு அங்கமாக இருக்கும் கிளாப்பிங்  தெரபி எனப்படும் கைதட்டிக்கொண்டே பாடும் பயிற்சி நடந்தது. பாட்டு ஆசிரியை பத்மபிரியா தலைமையில் மாணவிகள் அனை வரும் கைதட்டிக்கொண்டே திருக்குறளை பாடினார்கள். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை (பொ) திலக வதி கூறியதாவது, கைதட்டி பாடும் பயிற்சியினால் மாணவி களின் நினைவு திறன் அதிகரிப்பதுடன், மாணவிகள் பாடங் களை உற்சாகமாவும் படிக்க முடியும். வரும் நாட்களில் சினிமா பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் இக்கூட்டத்தில் கைதட்டி பாடப்பட உள்ளது என்றார்.