கோவை, மார்ச். 4 - இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் 9 ஆவது சர்வதேச பொறியியல் செயலாக்கக் கண்காட்சி கோவையில் புதனன்று துவங்கியது. கோவை மாவட்டம், கொடிசியா வளாகத்தில் பொறி யியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச பொறி யியல் கண்காட்சி துவங்கியது. தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக சிறு,குறு தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் இந்த கண்காட்சியினை துவக்கி வைத்தனர். மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம், உத்தரபிரதேசம், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களி லிருந்து பல்வேறு பொறியியல் நிறுவனங்கள் கண்காட்சி யில் அரங்குகளை அமைந்துள்ளன. இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.சி. சம்பத் கூறுகையில் , இந்த கண்காட்சியில் மொத்தம் 467 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 47 நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னையில் ரூ. 250 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் 80 கோடி மதிப்பீட்டில் பையோ-டெக் பார்க் 12 மாடியில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், தமிழக அரசு சார்பில் ராணுவ தொழில் பூங்காவிற்கு புதிய குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.