tamilnadu

img

கருகிய கரும்புக்கு காப்பீட்டுத்தொகை: கரும்பு விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர், நவ. 15- திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திரு வள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் 3-ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே ஆண்டுக்கு சுமார் 6-லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்து வந்த னர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யும் அளவு வெகு வாக குறைந்ததால், மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டு சாகுபடி செய்த கரும்பு  தண்ணீர் இல்லாமல் காய்ந்து போனதால் உற்பத்தி வெறும் 2 லட்சம் டன்னாக குறைந்தது. நம்பிக்கையுடன்  பெரும் தொகையை செலவு செய்த  விவசாயிகள்  கடும் இழப்பை  சந்தித்தனர். இதனால் ஒவ்வொரு விவ சாயிக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு  வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியா மல் தவிக்கின்றனர்.இப்படி தவிக்கும் விவ சாயிகள் தங்கள் பயிர்களுக்கு  தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பிரிமியம் செலுத்திய வர்களுக்கு உரிய தொகையைக் கூட கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர்.  கள ஆய்வு என்ற பெயரில் எந்த பாதிப்பும்  ஏற்படாத கரும்பு பயிர்களை மட்டும் ஆய்வு செய்து விட்டு, எந்த பாதிப்பும் இல்லை என  அறிக்கையை கொடுத்து விட்டு, விவசாயி களுக்கு கொடுக்க வேண்டிய காப்பீட்டு பணத்தை கொள்ளையடிப்பதாக விவசாயி கள் கூறுகின்றனர். இது குறித்து விசாரணை செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காப்பீடு தொகை கிடைக்க வழிவகை செய்ய  வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்துக

திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கி சுமார் 30  ஆண்டுகளுக்கு மேலாகிறது.இதில் உள்ள  இயந்திரங்கள் அதிக தேய்மானம் ஏற் பட்டுள்ளதால் அடிக்கடி பழுதடைந்து அறவை செய்வது நிறுத்தப்படுகிறது.அறைவை திறன் குறைந்துள்ளதால் விவ சாயிகள் தான் பாதிக்கின்றனர்.இதனை சீர மைக்க முன்னாள் முதலமைச்சர் ஜெலலிதா திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த ரூ.37.90கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். அந்த தொகையை அரசிடமிருந்து மாவட்ட ஆட்சி யர் கேட்டு பெற வேண்டும்.ஆலையை மேம்  படுத்த உடனடியாக ஆட்சியர் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பெருமாள் ஆட்சியரிடம் வியா ழனன்று (நவ.14) மனு அளித்துள்ளார். கரும்பு  விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ். ஜெயச்சந்திரன், விவசாயிகள் சங்கத்  தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராய ணன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்  அகமது உட்பட பலர் உடனிருந்தனர்.