கோவை, ஜூன் 25- இந்தியாவின் தலை சிறந்த கார் பந்தய ஓட்டு னர்களில் ஒருவரான கவு ரவ் கில் ஜே.கே.டயர் ரேசிங் குழுவில் இணைந்து உள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை அன்று நடைபெற்ற புதிய கார் ஓட்டுதல் நிகழ்ச் சியின் போது ஜே.கே.டயர் இதனை தெரிவித்தது. கவுரவ் கில் இந்தியன் நேஷனல் ரேசிங் சாம்பி யன்ஷிப் போட்டிகளில் மூன்று முறை ஆசிய அளவிலும், ஆறு முறை இந்திய அள விலான போட்டிகளிலும் பதக்கம் வென்றவர். இவர் ஜேகே டயரின் கோ கார்டியன் பிரிவில் தனது ரேசிங் பயணத் தைத் துவக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ஜே.கே.டயர் ரேசிங் போட்டிகளை வழி நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து கவுரவ் கில் கூறும்போது, எங்கு எனது கார் பந்தய பயணத்தைத் தொடங்கினேனோ அங்கேயே மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ள கார் பந்தயப் போட்டியில் புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்றார். இதைத்தொடர்து ஜே.கே.மோட்டர் ஸ்போர்ட்ஸ் தலைவர் சஞ்சய் கூறும்போது, புதிய தலைமுறையினருக் குக் கார் பந்தயங்களை, அதன் நுணுக்கங்கள் கற்று கொடுக்க சிறந்த வீரர்களை உருவாக்க கவுரவ் கில் தங்களு டன் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகும். அவரது அனுபவமும், நிபுணத்துவமும் புதிய டயர் உற்பத்தியை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும். விரைவில் கவுரவ் கில் ரேசிங் அகடாமி துவங்கப்படும் என்றும் கூறினார்.