tamilnadu

சுதந்திர தின விழா கோவை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

கோவை, ஆக. 13 - சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலை யத்தில் ரயில்வே காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடு பட்டனர். இதனை ஆய்வு செய்த ரயில்வே துணைக் கண்காணிப் பாளர் அண்ணாதுரை பின்னர் செய்தியாளர்களிடம் கூறு கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில்வே உட்கோட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை, மாநகர காவல் துறையினர் என மொத்தம் 475 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோப்பநாய், வெடிகுண்டு நிபு ணர்கள் ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களில் முழு நேரமும் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தண்டவா ளத்தில் செல்பவர்கள் மீதும், தண்டவாளத்தில் கல் வைப்ப வர்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே மது அருந்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

;