tamilnadu

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவு

கோவை, ஜூன் 19- கோவையில் கொரோனா பாதிப்பு காரணமாக சின்னி யம்பாளையம் பகுதியில் உள்ள கடைகளும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காத காரணத்தில் பூ மார்க் கெட் பகுதி கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப் புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சின்னியம்பாளை யம் பகுதியில் கடந்த 3 நாட்களில் 20 க்கும் மேற்பட்டோ ருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சின்னிய ம்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, அப்பகுதி யில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர முடியாத படி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள் ளன.  

இதேபோல், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட் கடை பகுதிகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் மாநகராட்சி நிர்வாகம் கடை களை அடைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத படி, தகர சீட்டுகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.