tamilnadu

img

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துக

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.11–  தேசிய ஊரக வேலை வாய்ப்பு  உறுதி திட்டத்தில் பணியாற்றிய வர்களுக்கு உரிய கூலியை வழங்க வேண்டும். வேலை காலத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வெள்ளியன்று விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலையை 200 நாட்களாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.400 கூலியாக வழங்க வேண்டும். இத்திட்டத்தில் தங்களது விருப்பத் திற்கு அதிகாரிகள் கூலியை குறைத்து வழங்கும் அநீதியை கண்டித்தும், வேலை அட்டை வழங்காதவர்களுக்கு உடனடியாக வேலை அட்டை வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூ தியம் வழங்க வேண்டும். அனைத்து  ஊராட்சிகளுக்கும் நூறுநாள் திட் டத்தில் வேலை வழங்க வேண்டும். ஏழை விவசாய கூலிகளுக்கு மனைப் பட்டா, அரசு வீடு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவை சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம். ஆனந்தன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கை களை விளக்கி சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்வராஜ், மார்க் சிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செய லாளர் எம்.ஆறுமுகம், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு உள் ளிட்டோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலா ளர்கள் ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளர் பி.திருமலை சாமி தலைமையில் 100க்கும் மேற் பட்ட விவசாயத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனி சாமி, விவசாய தொழிலாளர் சங்கத் தின் தாலுகா தலைவர் பி.ஆனந்த ராஜ், தாலுகா செயலாளர் பி.முருகே சன், துணை தலைவர் டி.சித்ரா,  சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலா ளர் கே.மகாலிங்கம், சிஐடியு ஒருங் கிணைப்பாளர் ஆர்.சேதுராமன், மாதர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செய லாளர் டி.விஜயா, ரேவதி உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டனர். இதன்பின், பொள்ளாச்சி  துணை வட்டாட்சியர் ஜெயசித்ராவிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இம்மனுவைப் பெற்றுக் கொண்ட துணை வட்டாட் சியர் ஜெயசித்ரா, இது குறித்து  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு நத்தம் நிலங்களை கண்டறிந்து நிலமில்லா ஏழை விவசாயத் தொழி லாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறு தியளித்தார்.

ஆனைமலை வட்டாட்சியர் அலு வலகத்தில் சங்கத்தின் ஆனைமலை ஒன்றிய தலைவர் ஏ.துரைசாமி தலை மையில்  வட்டாட்சியர் வெங்கடாசலத் திடம் (பொறுப்பு)  மனு அளிக்கப்பட் டது. இதில் சங்கத்தின் ஒன்றிய செய லாளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் பி.ராமலிங் கம், துணை செயலாளர் சி.சஞ்சீவி,  ஏ.முத்துசாமி, கே.மணிகண்டன், பால சுப்ரமணியம் மற்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரம சிவம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண் டனர்.

ஈரோடு

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தாலுகா தலை வர் கே.முருகன் தலைமை வகித்தார். இதில்  மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.நாச்சிமுத்து, வ.இளங்கோ, தாலுகா செயலாளர் என்.நாகராஜன், தாலுகா பொருளாளர் சி.பி.தங்க வேல், தாலுகா துணை செயலாளர் ஜி.விமல், சி.சக்திவேல், சிறுபான்மை மக்கள் நலக்குழுவின்  மாநில பொதுச் செயலாளர் பி.மாரிமுத்து,  தீ.ஒ.மு மாவட்ட செயலாளர் பி.பி.பழனிச் சாமி, தாலுகா தலைவர் என்.பழனிச் சாமி, மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.லலிதா உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டனர். இதன்பின் குடிமனை பட்டா கேட்டு 287 மனுக் கள் வாட்டாட்சியரிடம் வழங்கப் பட்டது.  அந்தியூரில் குடிமனை பட்டா கேட்டு நடைபெற்ற இயக்கத்திற்கு சங்கத்தின் தாலுகா தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலை வர் கே.ஆர்.விஜயராகவன், தாலுகா செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இப் போராட்டத்தில் 350க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தில் குடிமனை பட்டா கேட்டு 262 மனுவும், முதியோர் உதவித்தொகை கேட்டு 115 மனுவும் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டது.

கொடுமுடி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் தாலுகா தவைலர் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி, தாலுகா செயலாளர் கே.பி.கனக வேல் மற்றும் ஏ.ருக்மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பவானி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் தாலுகா துணை செயலாளர் பி.மாதையன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணி, தாலுகா செய லாளர் எஸ்.மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.