அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிப்பு
பென்னாகரம், ஆக.18- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இத னால் அருவியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தடை விதிக் கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு உள் ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டின. இதனால் இந்த அணை களில் இருந்து உபரிநீர் திறக்கப் பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 12-ந்தேதி ஒகேனக் கல்லுக்கு வினாடிக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்த தால் ஐந்தருவிகள் மூழ்கி வெள்ளக் காடாக காட்சி அளித்தது. தொங்கு பாலத்தை தொட்டபடி வெள்ளம் சென்றது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் தொங்கு பாலம் பார்வையாளர் கோபுரம், நடைபாதை, மெயின் அருவி பகுதி ஆகியவை சேதமடைந்தன. இதே போல் ஒகேனக்கல்லில் கர்நாடகா மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவ தற்காக கட்டப்பட்ட பாலம் மற்றும் பார்வையாளர் கோபுரம் ஆகிய வையும் வெள்ளப்பெருக்கால் சேத மடைந்து உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட் களாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளியன்று காலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநி லத்தில் மீண்டும் மழை பெய்வதால் அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதலாக மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சனி யன்று நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது ஞாயிறன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதி கரித்து இருப்பதால் தமிழக-கர் நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்துறையினர் அளவீடு செய்து தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள். நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனி டையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக் கவும் விதிக்கப்பட்ட தடை சனி யன்று 10ஆவது நாளாக நீடித்து வருகிறது.