மேட்டுபாளையம், பிப்.20- மேட்டுப்பாளையத்தில் உள்ள சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் வியாழனன்று பரவிய காட்டுத்தீயை வனத்துறை ஊழியர்களின் முயற்சியால் தீ பரவாமல் தடுக் கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகதிற்குட்பட்ட சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் கடந்த இருவாரத்திற்கு மேலாக வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடும் வெப்பம் காரணமாக வனத்தில் உள்ள நீராதாரங்கள் வற்றி வருவ தோடு மரங்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து கருகி உள்ளது. இந்நிலையில் சென்னாமலைக்கரடு மலை யடிவார வனப்பகுதியில் வியாழனன்று திடீரென காட்டுத்தீ பற்றி பரவியது. இச்சம்பவம் குறித்து அருகில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமுகை வனத்துறையினர் பச்சை செடிகளின் உதவியோடு தீயை அணைத்தனர். அதே நேரத்தில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தீத்தடுப்பு கோடுகளையும் உருவாக்கி கட்டுப்படுத்தினர். கோடை காலம் துவங்கும் முன்னரே வனத்தில் வறட்சி நிலவுவதால் வனம் சார்ந்த பகுதிகளுக்குள் யாரும் நுழைவதோ புகைப்பிடிப்பதோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.