கோவையில், அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஞாயிறன்று நீலச்சட்டை பேரணி நடைபெற்றது. இந்நிலையில், இப்பேரணியை வாழ்த்தும் வகையில், வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் செங்கொடியேந்தி வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொணடனர்.