tamilnadu

img

கோவை கொடிசியாவில் கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்

கோவை, ஜூலை 7- கோவையில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க இரண்டாவது சிகிச்சை மையம் கொடி சியா வளாகத்தில்  செயல்பாட்டுக்கு வந்தது. கோவை சிங்காநல்லூரிலுள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரத்தியேக மருத்து வமனையாக சுகாதாரத்துறை மாற்றிய மைத்தது. இங்கு சுமார் 350 படுக்கைக ளுடன் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் நோய்த்தொற்று அதிகரிப்பு காரணமாக 500 படுக்கைகளாக உயர்த்தப்பட்டன.

மேலும், நோய் தொற்று பாதிக்கப்பட்டு அறிகுறிகள் இல்லாமல் உள்ளவர்களுக்கு சிகிச்சை  அளிக்க கோவை கொடிசியா வளாகத் தில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் கடந்த ஒரு வார கால மாக அமைக்கப்பட்டு வந்தது.  இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் 359 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  தற்போது அறிகுறிகள் இல்லாமம் தொற்று பாதிக்கப்பட்ட 18 பேர் கொடிசியா வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத் திற்கு மாற்றப்பட்டனர். இதன் மூலம் கோவையில் வைரஸ் தொற் றுக்கு சிகிச்சை அளிக்கும் இரண்டா வது சிகிச்சை மையம் செயல்பாட் டுக்கு வந்துள்ளது.

;